தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும்: மேயர் தகவல்!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும்: மேயர் தகவல்!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில் "அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உடன் இருப்போர் கோரிக்கையினை தொடர்ந்து நாளை முதல் மாலை நேரத்திலும் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகமானது செயல்படும் என்று தெரிவித்தார். 

ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.