தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.30) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நகர மின்வாரிய செயற்பொறியாளர் க.சின்னத்துரை  வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் காரணமாக, இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரைச் சாலை, மற்றும் அதை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் சாலை, சுனோஸ் காலனி, செயின் பீட்டர் கோயில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடை தெரு, ஜார்ஜ் சாலை, 

கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம், பிராப்பர் தெரு, சந்தை சாலை, காந்திநகர், முனியசாமிபுரம். சிஜிஇ காலனி, லோகியா நகர், மேலசண்முகபுரம், 2ஆவது தெரு, ராஜபாண்டிநகர், பெரியசாமிநகர், எம்.ஜி.ஆர்.நகர், முடுக்குக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.