தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை(ஜூன் 4) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை(ஜூன் 4) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மாநகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/22 கே.வி நகர் துணை மின் நிலையத்தில் நாளை 04.06.2025 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார் புரம்,எழில் நகர், அழகேசபுரம், 

திரவியபுரம், முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல் புரம் அம்பேத்கார் நகர் குறிஞ்சிநகர், அண்ணா நகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையா புரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பர நகர், பிரையண்ட் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.