பெரும் அதிர்ச்சி.. பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்..!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்.

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்.
2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் சாதிய ரீதியிலான சமூக அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். நாட்டுப்புற கலைஞரான இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலமாக பலரின் பாராட்டுகளையும் பெற்றார். நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இருப்பினும் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் உயிரிழந்துள்ளார். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கராஜன் மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு உதவியாக அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி நியமனம் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.