தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காலை 9 முதல் மாலை 4 வரை தடை – பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 17, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். கொம்புகாரநத்தம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தடை ஏற்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காலை 9 முதல் மாலை 4 வரை தடை – பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகருக்கான முக்கியக் குடிநீர் விநியோகப் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (பிப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் ஆதாரங்களான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில், நாளை (17.02.2026) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

மின்வாரியத்தின் இந்தப் பராமரிப்புப் பணி காரணமாக, நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். குடிநீர் விநியோகத் தடையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்காகேட்டுக் கொண்டுள்ளார்.