தூத்துக்குடியில் பிப்-17 மின்தடை: காலை 9 முதல் மாலை 4 வரை 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்!

தூத்துக்குடியில் பிப்-17 மின்தடை: காலை 9 முதல் மாலை 4 வரை 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்!

தூத்துக்குடியில் நாளை (பிப்-17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை பிப்ரவரி 17, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் (விநியோகம்) தெரிவித்துள்ளார்.

இந்த பராமரிப்பு பணி காரணமாக வடக்கு காரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், K.தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூர், கொம்புகாரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பரப்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், S.கைலாசபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.