தூத்துக்குடியில் ஏப்.17ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்!!

தூத்துக்குடியில் ஏப்.17ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 17ஆம் தேதி ஏப்ரல் மாதத்திற்கான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" 17.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்" வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.