தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.1ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.1ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.01ம் தேதி அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் டிச.01ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர்த்தலைவர்கள், மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.