சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை!!

சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை!!

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து சித்தன் குடியிருப்பு காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக கிடந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து சித்தன் குடியிருப்பு காட்டு பகுதியில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா தலைமையிலான போலீசார் சென்று பார்த்த போது, காட்டுப்பகுதியில் எலும்பு கூடான நிலையில் சடலம் காணப்பட்டது. 

அதனருகே ஒரு கம்பும் தண்ணீர் பாட்டிலும் நீலநிற புடவை மற்றும் துணிகள் கிடந்துள்ளது. 60 வயது மதிக்க பெண் சடலம் எனவும், அவர் யாரென தெரியவில்லை. காட்டுப்பகுதிக்கு வந்து மீண்டும் வெளிய வர முடியாமல் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடல்குறி பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து படுக்கப்பத்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.