வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு... தூத்துக்குடியில் 31ம் தேதி 4-ஆம் ரயில்வே கேட் மூடல்!
தூத்துக்குடியில் வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) 4ஆம் ரயில்வே கேட் மூடப்படுகிறது.

தூத்துக்குடியில் வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) 4ஆம் ரயில்வே கேட் மூடப்படுகிறது.
தூத்துக்குடி-மதுரை இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி தூத்துக்குடி 4ஆம் ரயில் கேட் பகுதியில் தண்டவாள பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதில் மேலும் சில பணிகளை மேற்கொள்வதற்காக 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 4-ம் கேட் மூடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.