தூத்துக்குடியில் 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை : அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்!!

தூத்துக்குடியில் 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை : அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்!!

தூத்துக்குடியில் புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த  573 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதில் புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 573 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

விழாவில், குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியா் ஞான்ராஜ், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன், தெற்கு மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, மாவட்ட மருத்துவரணி தலைவா் அருண்குமாா், மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அருணாதேவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.