ஹோட்டலில் சோதனை என்ற பெயரில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் - தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடியில் ஹோட்டலில் சோதனை என்ற பெயரில் உணவு பாதுகாப்பு அதிகாரி லஞ்சம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஹோட்டலில் சோதனை என்ற பெயரில் உணவு பாதுகாப்பு அதிகாரி லஞ்சம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தமிழ் சாலையில் அமைந்துள்ள ராஜ பார்வை ஹோட்டலில் இன்று பிற்பகலில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் ஹோட்டல் உரிமையாளரிடம் ரகசியமாக லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.