மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்!

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்!

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்யக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) அனல் மின் நிலைய கிளைத் தலைவர் கென்னடி, தூத்துக்குடி மின் திட்ட கிளை திட்டத் தலைவர் மரியதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் கடநத 22-2-2018 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 6-1-1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிரந்தரம் செய்வோம் என முதல்-அமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட்டு ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலியை அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) நெல்லை மண்டலச் செயலாளர் எஸ்.அப்பாதுரை, மாநில துணைப் பொதுச் செயலாளர் பீர்முகமது ஷா, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) அனல் மின் நிலைய கிளைத் செயலாளர் கணபதி சுரேஷ், தூத்துக்குடி மின் திட்ட கிளை திட்ட செயலாளர் குன்னிமலையான், திட்ட பொருளாளர்கள் சுடலைமுத்து, இராமையா உள்ளிட்ட‌ நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட‌ ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசனிடம் அளித்தனர்.