தூத்துக்குடியில் கேட்பாரற்று நின்ற பைக் மீட்பு: போலீஸ் விசாரணை!

தூத்துக்குடியில் கேட்பாரற்று நின்ற பைக்கை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கேட்பாரற்று நின்ற பைக் மீட்பு: போலீஸ் விசாரணை!

தூத்துக்குடியில் கேட்பாரற்று நின்ற பைக்கை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மில்லர்புரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவு எண் கொண்ட மோட்டார் பைக் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பைக்கை யாரும் எடுக்காததால், அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் பைக்கை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். திருடப்பட்ட பைக்காக‌வோ, வேறு ஏதேனும் வழக்குகளில் சிக்கிய பைக்காகவோ இருக்கலாம் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.