தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களை உயர்வை கண்டித்து வஉசி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களை உயர்வை கண்டித்து வஉசி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு ரூ.100லிருந்து 140 ஆகவும் PGக்கு ரூ.160 லிருந்து 220 ஆக உயர்த்தியுள்ளது. ப்ரொபசியனல் சான்றிதழுக்கு ரூ.500லிருந்து 1000 ரூபாகவும் மற்றும் மறுமதிப்பீடு க்கு படிவம் அ ரூ.350 யிலிருந்து 550.ஆகவும் படிவம் பி. ரூ.250லிருந்து 350 ஆக உயர்த்தியுள்ளது.மன்னிப்பு கட்டணம் ரூ.1000 லிருந்து 1500 ஆகவும், தடையில்லா சாண்று வாங்குவதற்கு ரூ. 5000 லிருந்து 10,000இருந்து உயர்ந்துள்ளது.
இது போன்று அனைத்துக்கும் கட்டணத்தை பல மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளது.இதனால் மாணவ - மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி இன்று பல்கலைக்கழகத்திற்குட்பட்ட நான்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் வகுப்புப்புறகணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையிலும், பிஷப் கால்டுவெல் கல்லூரியில் மாவட்டக்குழு உறுப்பினர் சதிஷ் தலைமையிலும், காமராஜ் கல்லூரியில் நிர்வாகிகள் கௌதம், சுலேராஜ், நேசமணி ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பேராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் கிஷோர்குமார்,மாதவன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் வேல்சூர்யா, பிரகாஷ், வெனிஸ்ட், ஆனந்த், சத்யா உள்ளிட்ட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்..
இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கார்த்தி கூறுகையில் பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்தாவிட்டால் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிடுவோம் என தெரிவித்தார்.