தூத்துக்குடி மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகொள்!!

தூத்துக்குடி மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அதன் ஒரு பகுதியாக ராஜாஜி பூங்காவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் மாநகரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
சில பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அந்தப் பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.