மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி தாக்கிய ரவுடி கைது!

தூத்துக்குடியில் வீடுபுகுந்து முதியவர் மீது மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மட்டக்கடை இரட்சண்யபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பரமசிவம் (75). இவரது மகன் கதிர்வேல் (35). இவருக்கும் பூபால்ராயர்புரம் சில்வர்ஸ்டர் மகன் ஜூடு குமார் (34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஜூடு குமார் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகிய 2பேரும் சேர்ந்து கதிர்வேல் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார்களாம்.
மேலும் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை அவரது தந்தை பரமசிவம் மீது வீசிவிட்டுச் சென்றார்களாம். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து ஜூடு குமாரை கைது செய்தார். அவரது நண்பர் வினோத் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ஜூடு குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.