தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக தினேஷ் குமார் பொறுப்பேற்பு!

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக தினேஷ் குமார் ஐ.ஏ.எஸ் இன்று ( 5.2.23 ) ஞாயிற்றுகிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக தினேஷ் குமார் பொறுப்பேற்பு!

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக தினேஷ் குமார் ஐ.ஏ.எஸ் இன்று ( 5.2.23 ) ஞாயிற்றுகிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிவந்த சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக , திண்டுக்கல் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி )  தினேஷ் குமார், தூத்துக்குடி புதிய மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையராக தினேஷ் குமார் இன்று ( 5.2.23 ) ஞாயிற்றுகிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :-

தூத்துக்குடி எம்பி, அமைச்சர்கள், மேயர் ஆகியோரது ஒத்துழைப்போடு மாநகராட்சியின் அனைத்து விதமான அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியத்தும் கொடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரம், உட்கட்டமைப்பு களை, மேம்படுத்தப்படும், மக்கள் வாழ்வதற்கு உகந்தமான இடமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளித்து செயலாற்றுவேன். என தெரிவித்தார்.