விளாத்திகுளம் அருகே பொதுத் தேரில் சமுதாய கொடி கட்டியவர்கள் மீது வழக்கு பதிவு!
விளாத்திகுளம் சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது, கோவில் பொதுத் தேரில் குறிப்பிட்ட சமுதாய கொடி கட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விளாத்திகுளம் சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது, கோவில் பொதுத் தேரில் குறிப்பிட்ட சமுதாய கொடி கட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் லட்சக்கணக்கான விவசாய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா ஏப்ரல் 25 ஆம் தேதி துவங்கி மே 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. 10 ஆம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலைய தேரை இழுத்து விளாத்திகுளம் நகர் பகுதியில் சுற்றி வருவது வழக்கம். இந்த தேர் திருவிழாவின் போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த சிலர் சமுதாய கொடியான சிவப்பு, பச்சை கொடியை தேரில் கட்ட வேண்டும் என போலீசார், அறநிலையத்துறை, வருவாய் துறையினர் இடம் வாக்குவாதம் செய்து கட்டியுள்ளனர். பின்னர் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , மின் கம்பம் மீது கொடி தட்டியதாலும் கொடி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இதனை கண்டித்து அச்சமுதாயத்தை சேர்ந்த சிலர் தேரை செல்ல விடாமல் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசாருக்கு போராட்டக் காரர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது . இதில் காவல்துறையினரின் ஆடைகளை சிலர் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன நிம்மதிக்காக சாமி கும்பிட வந்த பக்தர்கள் அனைவரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி சென்றனர். அனைத்து சமுதாய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவே அந்த காலத்தில் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு என்பது நடைபெற்றது. ஆனால் தற்போது அதிலும் இத்தகைய செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள், பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் பொதுத்தேர் மீது சமுதாயக் கூடிய கட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு
இந்நிலையில் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், "விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், போலீசார், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வருவாய்த்துறை உத்தரவை மீறியும், அறநிலைத்துறை சட்ட திட்டங்களை மீறியும் கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருத்தேரின் மீது ஏறி சமுதாயம் சார்ந்த கொடியை கட்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் வீரசோலை, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் தேரில் சமுதாய கொடி கட்டியவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 295,353,504 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.