பைக்கில் முந்தி செல்ல முயன்ற விவசாயி லாரி டயரில் சிக்கி பரிதாப சாவு!

தட்டார்மடம் அருகே மோட்டார் பைக்கில் முந்தி செல்ல முயன்ற விவசாயி லாரி டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்..

பைக்கில் முந்தி செல்ல முயன்ற விவசாயி லாரி டயரில் சிக்கி பரிதாப சாவு!

தட்டார்மடம் அருகே மோட்டார் பைக்கில் முந்தி செல்ல முயன்ற விவசாயி லாரி டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்..

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கருவேலம்பாட்டை சேர்ந்த பிச்சையாபிள்ளை மகன் சுடலை. லாரி டிரைவர். இவர் நேற்று பழங்குளம் கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்வதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டு சாமிதோப்பில் இருந்து சாலைப்புதூர் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் பின்னால் நெல்லை மாவட்டம் உவரி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் லிங்கேஸ்வரன் (46) என்ற விவசாயி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது லிங்கேஸ்வரன் திடீரென்று மோட்டார் சைக்கிள் மூலம் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.