தூத்துக்குடியில் மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக இடியுடன் மழை பெய்தது. கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக இடியுடன் மழை பெய்தது.  கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா் அருகே கே.சிதம்பராபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி இந்திரா (52). இவா் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றாராம். மாலையில் மாடுகள் மட்டுமே வீடு திரும்பினவாம். 

சந்தேகமடைந்த உறவினா்கள் இந்திராவைத் தேடிச் சென்றனா். அப்போது, அங்கு அவா் மின்னல் பாய்ந்து இறந்துகிடந்தது தெரியவந்ததாம். தகவலின்பேரில் கடம்பூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.