தூத்துக்குடியில் கடித்த கட்டுவிரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்..

தூத்துக்குடியில் கடித்த கட்டுவிரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்..

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அருகே உள்ள ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகு ராணி (35), இன்று காலை வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் அழகு ராணி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து, சரவணன் அங்கு வந்து அவரை உடனடியாக மீட்டு அருகே உள்ள முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த ஒரு கேரி பேக்கில் தன்னை கடித்த பாம்பு இதுதான் எனக் கூறியவாறு மருத்துவமனை ஊழியர்கள் முன்பு பாம்பை காட்டினார்.இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், பாம்பு உயிருடன் இல்லை என்பதை அறிந்து பெருமூச்சு விட்டனர்.பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் இது எந்த வகையான பாம்பு என்பது குறித்து விசாரணை நடத்தி, பின்னர் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அழகு ராணியை திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.