நான்கு வயது பெண் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்று நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு: வடமாநில நபர் கைது..!

சென்னை, பல்லாவரம் அருகே நான்கு வயது பெண் குழந்தையை கூட்டிச் சென்று நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

நான்கு வயது பெண் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்று நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு: வடமாநில நபர் கைது..!

சென்னை, பல்லாவரம் அருகே நான்கு வயது பெண் குழந்தையை கூட்டிச் சென்று நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, பல்லாவரம் அருகே நாகல்கேணி திடீர் நகரில் தங்கியிருந்து கட்டட வேலை செய்யும் வடமாநில தம்பதி வேலைக்கு செல்லும்போது, அவர்களது குழந்தையை அருகில் உள்ள உறவினரிடம் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாலையில், வேலை முடித்துவிட்டு வந்த தம்பதி, உறவினர் வீட்டில் விட்டு சென்ற குழந்தை காணாததால், அக்கம்பக்கம் தேடியபோது, ஜாஸ் மொய்தீன் என்பவனின் வீட்டுக்கு அருகில் குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து குழந்தை மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த சங்கர் நகர் காவல்நிலைய போலீசார் ஜாஸ் மொய்தீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜாஸ்மொய்தீன் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து தாம்பரம் மகளிர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.