தூத்துக்குடி கப்பல் மாலுமி கொலை வழக்கில் சம்பந்தபட்ட வாலிபர் சேலத்தில் வெட்டி படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு, உணவு அருந்த சென்றபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

தூத்துக்குடி கப்பல் மாலுமி கொலை வழக்கில் சம்பந்தபட்ட வாலிபர் சேலத்தில் வெட்டி படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி  வாலிபர் சேலத்தில் படுகொலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றுள்ளார். உள்ளூர் பகுதிகளில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தால் சட்ட ஒழுங்கு சீர்கேடும் என நினைத்த நீதிமன்றம் வெளியூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனை தொடர்ந்து  கடந்த 10-ம் தேதி முதல் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காலை, மாலை என இரண்டு முறை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் கையெழுத்து போட வந்த மதன்குமார் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்பொழுது சேலம் மணக்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த செல்லும் பொழுது  பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சேலம் மாநகரின் மையப் பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகிலேயே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.