தூத்துக்குடியில் மே 10 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!!

தூத்துக்குடியில் நாளை (புதன் கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில்  மே 10 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!!

தூத்துக்குடியில் நாளை (புதன் கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில்  சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் - (SMART CITY) புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 110 கிவோ டவுண் உபமின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பெறும் 22 கிவோ முத்தம்மாள் காலனி உயரழுத்த மின் தொடரில் பக்கிள் ஓடை அருகில் உள்ள சாலையில் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதன் காரணமாக நாளை 10-5-2023  (புதன் கிழமை) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை அண்ணா நகர் 1 முதல் 12 வரை, மகிழ்ச்சிபுரம், மங்களபுரம், கேவி கே நகர் மேற்கு, இராஜகோபால் நகர் மற்றும் அதை சுற்றி உள்ள  பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறும் மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.