திருச்செந்தூர் ரோடு பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.

திருச்செந்தூர் ரோடு பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.

திருச்செந்தூர் ரோடு பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.

தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் ஆறுமுகசாமி (42) என்பவருக்கும், தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த ரமேஷ் மகன் விமல் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 26.10.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குபட்ட திருச்செந்தூர் ரோடு பகுதியில் ஆறுமுகசாமி நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த விமல் மற்றும் அவரது உறவினரான தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த முனியசாமி மகன் மாயாண்டி (32) ஆகிய இருவரும் சேர்ந்து ஆறுமுகசாமியிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆறுமுகசாமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து எதிரிகள் விமல் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தார்.