தூத்துக்குடியில் பைக்குகள் மோதல் ஆட்டோ டிரைவர் பலி: மேலும் ஒருவர் படுகாயம்!

தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடியில் பைக்குகள் மோதல் ஆட்டோ டிரைவர் பலி: மேலும் ஒருவர் படுகாயம்!

தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீமுருகன் மகன் ஜெயக்குமார் (40). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவர் தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சேதுபாதை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிர வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஜெயக்குமார் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த பட்டினமருதூர் திருமணி மகன் இசக்கிராஜ் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். விபத்து குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த ஜெயக்குமாருக்கு மேரி என்ற மனைவியும், சூரியா என்ற 5 வயது மகனும் உள்ளனர். அவரது மரணம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.