தூத்துக்குடியில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து : 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து : 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் பைக்கில் வேகமாக சென்றதை கண்டித்ததால் 2பேரை கத்தியால் குத்திய 3பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.

 

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஜான்சன் மகன் ஜான் கிஷோர் (35), அதே பகுதியைச் சேர்ந்தவர் போஸ் மகன் ஜோன்ஸ் (24). இவர்கள் இருவரும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது ஒரே பைக்கில் 3பேர் அதி வேகமாக சென்றார்களாம். இதனை அவர்கள் 2பேரும் கண்டித்துள்ளனர். இதையடுத்து பைக்கில் வந்த 3பேரும் சேர்ந்து ஜான் கிஷோர், ஜோன்ஸ் ஆகிய 2பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்களாம். 

 

இதில் காயம் அடைந்த 2பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, சண்முகபுரம் வண்ணார் 2வது தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார் (24), அழகேசபுரம் கணேசன் மகன் பெருமாள் (23), எம்பரர் தெரு ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சையா (24) ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.