மக்கள் விரோத, கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கிளர்ச்சி பிரச்சாரம் : தூத்துக்குடியில் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் பங்கேற்பு..!

மக்கள் விரோத, கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கிளர்ச்சி பிரச்சாரம் : தூத்துக்குடியில் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் பங்கேற்பு..!

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சிதம்பரம் நகர் முதல் பிரையன்ட் நகர் 12 வரை புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு நத்தம், புறம்போக்கு பகுதியில் இலவச பட்டா வழங்கிய இடத்தில் வீடுகட்டி குடியிருக்கும் குடும்பங்களுக்கு "அ" பதிவேற்றம் செய்து உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும், மாதம் மாதம் மின் கட்டணம் கணக்கீடு செய்திட வேண்டும், பாதாள சாக்கடை இணைப்பு வழங்காத வீடுகளுக்கு கட்டாய வரி வசூலை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து நெருக்கடியை போக்கிட விவிடி சிக்னல் மேம்பாலம் பணிகளை உடனே துவங்கிட வேண்டும் உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடைபயண இயக்கம் நடைபெற்றது.

இதற்கு மாநகர் செயலாளர் எம். எஸ் . முத்து , தலைமை வகித்தார்.  சிபி எம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரசல், பா.புவி ராஜ், மாநகர் செயலாளர் எம். எஸ்.முத்து, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.காசி, இனிதா, ஶ்ரீநாத், மாமன்ற உறுப்பினர் முத்து மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகரில்  மாநகர் குழு உறுப்பினர் கே.ஆறுமுகம், சிவந்தை சந்திப்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சசிகுமார், முனியசாமி வாட்டர் டேங்க் பகுதியில் காஸ்ட்ரோ, சிவந்தாகுளம் பகுதியில் வயனபெருமாள், பிரையன்ட் நகர் 7இல் மனோகரன், பிரையன்ட் நகர் 12 இல் ஜேம்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.