தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக டாக்டர் சி.மதன் நியமனம்: அகில இந்திய அளவில் விருது பெற்ற ஐபிஎஸ் அதிகாரி!

அகில இந்திய அளவில் விருது பெற்ற ஐபிஎஸ் டாக்டர் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இளைஞர்களுக்கு உற்சாகம் தரும் செய்திகள்!

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக டாக்டர் சி.மதன் நியமனம்: அகில இந்திய அளவில் விருது பெற்ற ஐபிஎஸ் அதிகாரி!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் இன்று (13.02.2026) நியமிக்கப்பட்டார். மதுரைச் சேர்ந்த சிட்டிபாபு சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன், 31, எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவரான இவர், 2022-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் இரண்டு வருடம் பயிற்சி பெற்றார்.

பின்னர் தஞ்சாவூரில் ஏ.எஸ்.பி. ஆகவும், திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராகவும் பணியாற்றிய மதன், இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்.

2021 UPSC தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே 195வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்ற சி.மதன், ஐபிஎஸ் பயிற்சியில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் கோப்பை, பிரதமர் பேட்டன் மற்றும் உள்துறை அமைச்சர் ரிவால்வர் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து, தூத்துக்குடி இளைஞர்கள் தங்களின் கல்வி மற்றும் சாதனை வழிகாட்டியாக மதனை பாராட்டி வருகிறார்கள். இவரின் நியமனம் மாவட்டத்தில் மகிழ்ச்சி மற்றும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், என். சிலம்பரசன் சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார், திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக இருந்த எஸ்.விஜயகுமார் திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.