தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் மாதம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் மாதம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற மார்ச் 7-ந் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 14-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 21-ந் தேதி கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 28-ந் தேதி தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என‌ தூத்துக்குடி மேற்பார்வை என்ஜினீயர் (பொறுப்பு) ரெமோனா தெரிவித்து உள்ளார்.