தூத்துக்குடியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாலைநேர தர்ணா போராட்டம்!!

தூத்துக்குடி மேற்பார்வை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தூத்துக்குடி மின் பகிர்மான கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டுத்தொடரில் மின்வாரிய நிரந்தர பணியாளர்கள், கேங்மேன் ஒப்பந்த பணியாளர்கள் , பகுதி நேர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளை வெளியிடக்கோரியும், மணிவாரியத்தில் கலையாக உள்ள 65 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக ஆக்கிட வேண்டும், மின் வாரியத்தை பொதுதுறையாக தொடர செய்ய வேண்டும், தனியார் மயபடுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதற்கு திட்ட தலைவர் வை. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட தலைவர் பேச்சி முத்து, திட்ட செயலாளர் குண்ணிமலையான், ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத் தலைவர் , ஜெய பாண்டி, நிர்வாகிகள் ரவி தாகூர், யோவான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக திட்ட பொருளாளர் ராமையா நன்றி கூறினார்.