மனைவியை கழுத்தறுத்து கொன்று புதைக்க முயன்ற கணவர்: குடும்பத் தகராறில் பயங்கரம்!

மனைவியை கழுத்தறுத்து கொன்று புதைக்க முயன்ற கணவர்: குடும்பத் தகராறில் பயங்கரம்!

ஏரல் அருகே குடும்பத் தகராறில், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, உடலை புதைக்க முயன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல், நம்மாழ்வார் நகரை சேர்ந்தவர் மரியசாமுவேல், (60). இவரது மனைவி ஜோஸ்பின் (57). இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூருவிலும், மற்றொருவர் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியிடையே குடும்பத் தகராறு காரணமாக, நேற்று அதிகாலை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து மரியசாமுவேல் கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை ஊருக்கு வெளியே உள்ள பாலத்தின் கீழே புதைக்க துாக்கி சென்றார். அப்போது, ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், உடலை அங்கேயே போட்டுவிட்டு, தலைமறைவானார். இதனிடையே ஜோஸ்பின் தம்பி ஜான் போஸ்கோ, தன் அக்காவை தேடி பார்த்தபோது, அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்து அதிர்சசி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மரிய சாமுவேலை தேடி வருகின்றனர்.