திருச்செந்தூரில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வந்ததும் 108 ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்து சாலையில் அலப்பறை செய்த வி.சி.க.வினர்.. 102 பேர் மீது பாய்ந்த வழக்கு..

திருச்செந்தூரில், சாலையை மறித்து, ஊர்வலமாக சென்று, போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக, விசிகவினர் நூற்றி இரண்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்செந்தூரில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வந்ததும் 108 ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்து சாலையில் அலப்பறை செய்த வி.சி.க.வினர்.. 102 பேர் மீது பாய்ந்த வழக்கு..

திருச்செந்தூரில், சாலையை மறித்து, ஊர்வலமாக சென்று, போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக, விசிகவினர் நூற்றி இரண்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை திருச்செந்தூா் தொகுதி மாவட்ட செயலா் விடுதலை செழியன் தலைமையில் சுமாா் 50 ஆண்கள், 50 பெண்கள்- 17 ஆட்டோக்கள், 2 காா்களில் கட்சி கொடியுடன் திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து, கோஷமிட்டவாறு திருச்செந்தூா் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள காமராஜா் சிலைக்கு அனுமதியின்றி பேரணியாக வந்துள்ளனா்.

அப்போது மக்கள், பக்தா்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் அரசு மருத்துவமனை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல் சென்ாக விடுதலை செழியன், ராஜ்குமாா் உள்ளிட்ட 102 போ் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.