பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு பரிசுத்தொகை!
தூத்துக்குடி மாவட்ட அளவில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் கல்வி பரிசுத்தொகையை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட அளவில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் கல்வி பரிசுத்தொகையை வழங்கினார்.
காவல்துறையில் பணியாற்றி வரும் காவல் துறையினரின் வாரிசுகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களுக்கு கல்வி பரிசு தொகை வழங்கப்படும். அதேபோன்று காவல்துறையின் வாரிசுகளில் மேல்நிலைப் பள்ளி படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களின் உயர் கல்வி படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக 25,000 வரை வழங்கப்படும்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிசுத் தொகை வழங்கி, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மயில்குமார், உதவியாளர் அனிதா கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.