உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2000 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் மற்றும் தொலைப்பேசி எண் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2000 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் மற்றும் தொலைப்பேசி எண் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சுமார் 6,554 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000/- அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தபட்டு வருகிறது. தற்போது பராமரிப்பு உதவித் தொகை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளின் முழு விபரம் டிஜிட்டல் மயமாக்கப்படு வருகிறது.
எனவே, ரூ.2000/- பெறும் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் குணமடைந்தோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண், தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி புத்தக நகல் விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமே ஜனவரி 2023 மாதத்திற்கான பணம் அனுப்பப்படும். ஆவணங்கள் சமர்பிக்காத நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆவணங்களை சமர்பிக்காத பயனாளிகள் உடனடியாக மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அமைத்தையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.