தூத்துக்குடியில் ஓட்டல் வடையில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் எதிரொலியாக : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு..!

தூத்துக்குடியில் ஓட்டல் வடையில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் எதிரொலியாக : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு..!

தூத்துக்குடியில் ஓட்டல் வடையில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள தேவர்களும் சாலையில் தனியார் காபி ஷாப் மற்றும் ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு தினசரி மூன்று வேலைகளும் உணவு, மற்றும் டீ காபி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை ஓட்டல் வடையில் கரப்பான் பூச்சி இறந்து இருந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது..

இச்சம்பவம் தொடர்பாக டூட்டி விஷன் இணையதளத்தில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து மேற்படி ஹோட்டலில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் அறிவுறுத்தலின் பேரில் மேற்கண்ட உணவகம், உணவு பாதுகாப்பு அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டது.

அறிவுரைகள் வழங்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேற்கண்ட உணவகம் தொடர் கண்காணிப்பில் வைக்கப் படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.