தூத்துக்குடி மண்ணில் இருந்து மாணவர் சங்க தியாகிகள் சோமு செம்பு நினைவுச்சுடர் பயணம் தொடங்கியது!!

தூத்துக்குடி மண்ணில் இருந்து மாணவர் சங்க தியாகிகள் சோமு செம்பு நினைவுச்சுடர் பயணம் தொடங்கியது!!

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர் சங்க தியாகிகள் சோமு செம்பு நினைவு ஜோதி சோமு வின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கே.துரைச்சாமி புரம் கிராமத்தில் இருந்து மதுரை நோக்கி பயணம் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஜோதி பயணம் வாகனப் பேரணியாக புறப்பட்டது.

இந்நிகழ்வுக்கு கட்சியின் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் த.சண்முகராஜ் தலைமை வகித்தார். மாணவர் சங்க தியாகிகள் நினைவு ஜோதியை மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் எடுத்துக் கொடுக்க, பயணக்குழு தலைவரும், மாநிலக்குழு உறுப்பினருமான கே.ஜி.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். பயணக் குழுவில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் அரவிந்தசாமி, இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் சம்சீர் அகமது, மத்தியகுழு உறுப்பினர் மிருதுளா, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வில் சிபி எம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அப்பா துரை, இரா.பேச்சிமுத்து, தா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராகவன், சித்ரா தேவி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கிஷோர் குமார், நிர்வாகிகள் ராம் குமார், மாடசாமி, வாலிபர் சங்க நிர்வாகி ஶ்ரீ நாத் , சோமு செம்பு அறக்கட்டளை நிர்வாகி காளி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தோழர் சோமசுந்தரம் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது உருவ படத்திற்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து தோழர் சோமு செம்பு நினைவு கட்டிடத்தில் தோழர் சோமு படத்திற்கு சிபிஎம் மாவட்ட செயளாலர் கே.பி.ஆறுமுகம், தோழர் செம்பு படத்திற்கு டாக்டர் சுப்பையா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் , மாணவர் சங்க தியாகிகளின் நினைவு ஜோதிக்கு தூத்துக்குடி சிதம்பரம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமையில் உற்சாகமாக வரவேற்கப்பட்டது. முன்னதாக போல்டன் புரத்தில் உள்ள தோழர் செம்புலிங்கம் வீட்டில் உள்ள அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், ஆர்.ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, மாரியப்பன், இனிதா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஒன்றியக்குழு சார்பில் புதுக்கோட்டை பஜாரில் ஒன்றிய செயலாளர் கே.சங்கரன் தலைமையில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.