தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் கழிப்பறையை பராமரிக்க வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை!

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் கழிப்பறையை பராமரிக்க வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை!

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை சுத்தம் செய்யாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் அதிகமாக வந்து சென்றுவரக்கூடிய புதிதாக கட்டப்பட்டுள்ள பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை களை கண்காணிக்காமல், கவனிக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும். 

மக்கள் அவசர நிலையில் கழிப்பறை பயன்படுத்தி  வருகின்றார்கள். நோய் தொற்று  பரவி மக்களை பாதிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.