ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் திறக்க வேண்டும்: அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலை கிடைக்காத இளைஞர்கள் குற்ற செயலில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட ஆலைகளை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடியில் இருந்து இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மற்றும் மதுராகோட்ஸ் நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் மூடப்பட்டு வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டு பல்வேறு தொழில்களை செய்பவர்கள் வேலை இழந்து வேலையில்லா திண்டாட்டம் உருவாகியுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பலர் குற்றச்செயலில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நல சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை சார்பில் மத்திய மாநில அரசுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மதுரா கோட்ஸ் உள்ளிட்ட ஆலைகள் மூடப்பட்டதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் துறைமுகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி டிவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.