பிளாஸ்டிக் இல்லாத வ.உ.சிதம்பரனார் துறைமுகம் : உலக சுற்றுச்சூழல் தினத்தில் அறிவிப்பு!!

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பிளாஸ்டிக் இல்லாத துறைமுகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை செயல்முறைகளுக்கான துறைமுகத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஜீன் 5, 2025 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்’ என்னும் கருப்பொருளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் மற்றும் கொச்சின் துறைமுக ஆணையத் தலைவர் பி. காசி விஸ்வநாதன், இருவரும் இணைந்து வ.உ. சிதம்பரனார் துறைமுக துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், தலைமை கண்காணிப்பு அதிகாரி, மற்றும் துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் வ.உ.சிதம்பரனார் ஆணையத்தை ‘நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத மண்டலம்’என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார்கள்.
ஜீன் மாதம் 1 முதல் 5 வரை நடைபெற்ற சுற்றுசூழல் வார கொண்டாட்டத்தில் துறைமுகம் சுற்றுப்புற சூழலில் பல தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. துறைமுக ஊழியர்களுக்கு பசுமை நடைபயணம், மரக்கன்றுகள் வழங்குதல், பசுமை உறுதிமொழி எடுத்தல், கழிவிலிருந்து சுத்தத்தை நோக்கி பயணித்தல் என்ற தலைப்பில் போட்டி, வாசக எழுத்துப் போட்டி, கோலப் போட்டி மற்றும் பசுமை விழிப்புணர்வு வினாடிவினா போட்டி, புகைப்படம் மற்றும் குறும்படம் திரையிடல் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் சுற்றுசூழல் பாதுகாப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படும் வகையில் ‘நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத மண்டலம்’ எனும் கருப்பொருளில் துறைமுகத்தின் முக்கியமான பகுதிகளில் தெரு நாடகம் நடைபெற்றது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சுற்றுசூழல் நிலைத்தன்மைக்கான தனது அற்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனது நிர்வாக அலுவலகத்தை பசுமை சான்றிதழ் தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தி வருகிறது. 1 மெகாவாட் சூரியமின்சக்தி திட்டம் தற்போது செயல்படுத்தபட்டு வருகிறது, மேலும் 2 மெகாவாட் மின்கல சேமிப்பு அமைப்பை செயல்படுத்தும் திட்டம் தீவிர பரீசிலனையில் உள்ளது. 6 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் மற்றும் பசுமை மெத்தனால் சேமிப்பு வசதிக்கான ஒப்பந்ததிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் காற்றாலை போன்ற மரவடிவிளான காற்றாலை மரம், சூரிய மின்னாலை வடிவிளான சூரிய மரம் மற்றும் தரைதள காற்றாலை போன்ற புதுமையான முயற்சிகளுக்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடைபெற்ற வருகின்றன. உள்நாட்டு சரக்குகளை கையாளும் தளத்தில் தரைதளத்திலிருந்து கப்பல்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தில் நிலையான முன்னேற்றம் காணப்படுகிறது. கூடுதலாக 1 மெகாவாட் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்காக தேசீய அனல்மின் நிலையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கான திட்டம் நடைமுறையில் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிங்கப்பூர், ரோட்டர்டாம் துறைமுகங்களுடன் இணைந்து பசுமை வழித்தடம் தொடர்பான கூட்டாய்வுகள் தீனதயால் துறைமுக ஆணையத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன. உயிரி எரிப்பொருள் வழித்தடத்தை நிறுவுதல் (டீழை-கரநட உழசசனைழச) மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொடர்பான முயற்சிகளை முன்னெடுப்பது குறித்து துறைமுக உபயோகிப்பாளர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
தலைமைப் பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, அனைவரையும் வரவேற்று துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த மோலோட்டமான விளக்கத்தை கூறினார். நிறைவாக நிர்வாகப் பொறியாளர் ஷோபா நன்றி தெரிவித்தார்.
----------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE