தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண் தற்கொலை முயற்சி: பரபரப்பு..!

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த  பெண் தற்கொலை முயற்சி: பரபரப்பு..!

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து வாழ்கிறாராம். மேலும், இவர் வேலை செய்து வரும் திரேஸ்புரம் பகுதியில் உள்ள வீட்டில் 2 பவுன் தங்க மோதிரங்கள் திருடு போயினவாம். வீட்டின் பெண் உரிமையாளர், இவர் மீது சந்தேகப்பட்டு, வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும், மீனாவை ஆட்டோவில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது அவர் லெக்கின்ஸை கழிவறை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.