#Breaking: உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் முக்கிய எதிரிகள் தலைமறைவாக இருப்பதற்கு பணம் கொடுத்து உதவிய 2 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடன்குடியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் தற்கொலை வழக்கில் முக்கிய எதிரிகள் தலைமறைவாக இருப்பதற்கு பணம் கொடுத்து உதவிய இருவர் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நடவடிக்கை.

#Breaking: உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் முக்கிய எதிரிகள் தலைமறைவாக இருப்பதற்கு பணம் கொடுத்து உதவிய 2 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடன்குடியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் தற்கொலை வழக்கில் முக்கிய எதிரிகள் தலைமறைவாக இருப்பதற்கு பணம் கொடுத்து உதவிய இருவர் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடன்குடி புதுக்காலணியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் பெருமாள் மகன் சுடலைமாடன் அவர்கள் கடந்த 17.03.2023 அன்று விஷமருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 23.03.2023 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதுகுறித்து மேற்படி சுடலைமாடன் மனைவி தங்கம்மாள் என்பவர் தனது கணவரை ஆயிஷா கல்லாசி மற்றும் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் ஜாதி பெயரை கூறி திட்டி கொடுமைப்படுத்தியதால் தனது கணவர் விஷமருந்திவிட்டதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டியதாகவும் கொடுத்த புகாரின் அடிப்படையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் அவர்களை இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவுப்படி மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உடன்குடியைச் சேர்ந்த கல்லாசி மனைவி ஆயிஷா கல்லாசி (62), உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, ஆயிஷா கல்லாசி மகன் அஷாப், ஆயிஷா கல்லாசி மருமகள் ஹூமைரா பாத்திமா ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்ததையடுத்து போலீசார் அவர்களை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்கு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தபோது, அவர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அவர்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உடன்குடி திசையன்விளை ரோட்டைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ஜெபசிங் (52) என்பவர் தலைமறைவாக உள்ளவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் போட்டு அதை அவர்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால் அவர்கள் இருக்குமிடம் போலீசாருக்கு தெரிந்து விடும் என்று தனது ஏடிஎம் கார்டை அவர்களுக்கு கொடுத்து அதில் ரூபாய் 50,000/-ம் பணமும் வைத்துக் கொடுத்து பண உதவி செய்தது தெரியவந்தது, மேலும் அதே ஏடிஎம் கார்டு மூலம் அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்வதற்காக முத்தையாபுரத்தைச் சேர்ந்த செய்யது முகமது மகன் செய்யது சிராஜூதீன் (36) என்பவரும் உடன்குடியிலிருக்கும் ஜெபசிங் என்பவரது வங்கி கணக்கின் மூலம் ரூபாய் 40,000/-ம் கொடுத்து உதவியுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் திரு. ரகுராஜன் மற்றும் போலீசார் இன்று போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு முக்கிய எதிரிகளுக்கு பணம் கொடுத்து உதவிய ஜெபசிங் (52) மற்றும் செய்யது சிராஜூதீன் (36) ஆகிய இருவரையும் நேற்று (04.04.2023) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட தலைமறைவாக உள்ள முக்கிய எதிரிகள் விரைவில் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.