தூத்துக்குடி அருகே கருப்பு நிற முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!!
தூத்துக்குடி அருகே குமாரகிரி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுப்பாடு கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்று துறையின் முன்னாள் முனைவர் பட்ட ஆய்வாளர் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்க வருவதைக் கண்டார்.