கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : போலீஸ் விசாரணை

தூத்துக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை மங்களகிரியில் முனியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20ம் தேதி பூஜை முடிந்த பின்னர் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நேற்று காலை நடையை திறக்க வந்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கோவில் தர்மகர்த்தா மந்திரமூர்த்தி (45) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Follow the தூத்துக்குடி செய்திகள் channel on WhatsApp:*