திருச்செந்தூர் நாழிகிணறு சாலையில் தூய்மைப் பணி : ஆட்சியர் தகவல்!
திருச்செந்தூர் நாழிகிணறு சாலையில் தூய்மைப் பணி : ஆட்சியர் தகவல்!

திருச்செந்தூர் நாழிகிணறு செல்லும் சாலை டோல்கேட் அருகேயுள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நாழிகிணறு செல்லும் சாலை டோல்கேட் அருகேயுள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் குப்பை கொட்டப்படுவதால் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மாடுகள் கிளறிவிடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும் சமயம் கொசுக்கள் அதிகளவில் தங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. கோயில் செல்லும் பிரதான சாலை அருகில் அடிக்கடி கொட்டப்படுகிறது.
எனவே உடனடியாக இந்த குப்பைகளை அள்ளவும், இங்கு குப்பைகளை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.உடனடியாக திருச்செந்தூர் நாழிகிணறு செல்லும் சாலை டோல்கேட் அருகேயுள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் குப்பைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.