உப்பாற்று ஓடையில் செத்து மிதக்கும் மீன்கள்: ஆய்வு செய்ய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

உப்பாற்று ஓடையில் செத்து மிதக்கும் மீன்கள்: ஆய்வு செய்ய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

உப்பாற்று ஓடையில் செத்து மிதக்கும் மீன்கள்: ஆய்வு செய்ய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் அதிகளவு மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து சம்பபந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

தூத்துக்குடி தருவைகுளம் செல்லும் வழியில் கோமஸ்புரம் அருகே உப்பாற்று ஓடை உள்ளது. உப்பளங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கடலில் கலக்கும் வகையிலும் மழைகாலங்களில் மழை நீர்வடிகாலகவும் உள்ள உப்பாற்று ஓடையில் இன்று அதிகளவு மீன்கள் உயிரிழந்த நிலையில் ஒதுங்கின. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாக்கு பைகளில் அள்ளி சென்றனர். மீன்கள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.