விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற உடன்குடி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைபனியாளர் சுடலை மாடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைபனியாளர் சுடலை மாடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (வயது 55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணி மேற்பார்வையாளர் (மேஸ்திரி) பணியை கவனித்து வந்தார். இந்த நிலையில், சுடலைமாடனை மேற்பார்வையாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க, பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால், அவரை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சுடலைமாடன் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுடலை மாடன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். தூய்மை பனியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.