தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

 தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

சென்னையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த காசி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்வாரிய வரி ஏய்ப்பு தொடர்பாக மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும்  சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த பணிகளுக்கும் பில்களுக்கும் 10% கமிஷன் அமைச்சருக்கு கொடுத்தால்தான் கிடைக்கும் நிலை உள்ளதாக ஒப்பந்தார சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வருமான வரித்துறை ரெய்டு நடப்பது  குறிப்பிடதக்கது. இந்த சோதனையால் அனல்மின் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அனல்மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்ததார்கள் சங்கம் மூலம் ஒப்பந்ததார்கள் பலர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகளவில் பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், பணி முடிந்த பின்னரும் அவர்களால் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் தினறி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய ஒப்பந்தாரர்களிடமும் ஒப்பந்தாரர்கள் சங்கம் பணம் வாங்கியதாக தெரிகிறது. எனவே ஒப்பந்ததார்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் வீடுகளிலும்  வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.