மரக்கிளையில் மின் கம்பி உரசினால் தகவல் தெரிவிக்க மின்வாரியம் வேண்டுகோள்!

மரக்கிளையில் மின் கம்பி உரசினால் தகவல் தெரிவிக்க மின்வாரியம் வேண்டுகோள்!

மரக்கிளையில் மின் கம்பி உரசினால் தகவல் தெரிவிக்க மின்வாரியம் வேண்டுகோள்!

மரக்கிளைகளில் மின் கம்பிகள் உரசினால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து திருச்செந்தூா் கோட்ட மின் வாரிய நிா்வாக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வந்தது. இதனால், மின்மாற்றியில் எரி இழை அறுந்து சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது, அதை மின்வாரிய பணியாளா்கள் உடனடியாக சரி செய்தனா்.

எனவே திருச்செந்தூா் பிரிவிற்குள்பட்ட பகுதிகளில் ஏதேனும் மரக்கிளைகள் மின் வயரில் உரசுவதாக தென்பட்டாலோ அல்லது வயா் அறுந்து விழுந்தாலோ பொதுமக்கள் உடனடியாக 9445854802 என்ற கைப்பேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.